விரிவாக்கம்

கோயமுத்தூர் மாவட்டம் , அன்னூர் வட்டம் ஆகிய வரையறைக்கு உற்ப்பட்ட பகுதியில் அமைந்துள்ள காட்டம்பட்டி எனும் அழகிய கிராமம் பற்றிய ஆக்கப்பூர்வமான செய்திகள் மற்றும் வளர் இளம் நற்பணி சங்கம் எனும் இயக்கம் சார்ந்த நிகழ்வுகளின் வலைதளப் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

வெள்ளியங்கிரி - பாதயாத்திரை

நமச்சிவாய வாழ்க 
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 

 வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலானது கோயமுத்தூர் மாவட்டத்தில் பூண்டி என்ற ஊரில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் சாந்த நிலையில் காட்சியளிக்கிறார் மற்றும் இந்த தளமானது தென்கயிலாய மலை என அறியப்படுகிறது. இங்கு கோவில் அடிவாரத்தில் இருந்து ஏழு மலைகளைக் கடந்து தென்கயிலாய சிவபெருமானை பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.

இந்த வெள்ளியங்கிரி மலையில் மூலவராக வெள்ளிங்கிரி ஆண்டவர்  எனும் சிவபெருமானும் அம்மனாக மனோன்மணி அம்மனும் காட்சி தருகின்றனர்.
இந்த மலையில் மூன்று புனித தீர்த்தங்கள் கைதட்டி சுனை, பாம்பாட்டி சுனை மற்றும் ஆண்டி சுனை என்று அழைக்கப்படுகின்றன.
இந்த கோவிலானது 2000-3000 வருடம் பழமை வாய்ந்தது.

நமது காட்டம்பட்டியில் இருந்து 40 வருடங்களாக இந்த கோவிலை நோக்கி பாதயாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. நமது மக்கள் மாலை அணிந்து 24 நாட்கள் காலை மாலை சிறப்பு பூஜை செய்து பாதயாத்திரையை துவங்குவார்கள். பின்பு காட்டம்பட்டியில் இருந்து நடந்தே சென்று மலை ஏறுவார்கள்.

புகைப்படங்கள்

வெள்ளியங்கிரி மலை தமிழ்நாடு கோயம்புத்தூரிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர். தென்கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையானது கொட்டும் பனியும், கை தொட்டு விளையாடும் உயரத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது. சுமார் 3500 அடி உயரமுடைய (கடல் மட்டத்திலிருந்து 5000 அடி,1524 m) இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம்.இரவில், மலையில் காட்டு யானைகள் மற்றும் விலங்குகளின் நடமாட்டம் தொடங்கிவிடும் என்பதால் இங்கிருந்து மாலையிலேயே திரும்பி விடுதல் பாதுகாப்பானது என்று சொல்லபடுகிறது ஆனால் அனைவரும் இரவில் பயணத்தை தொடங்கி அதிகாலை மலை உச்சிக்கு சென்று சேர்கிறார்கள். அதிக மக்கள் நடமாட்டத்தால் வனவிலங்குகள் அங்கு இருப்பதை தவிர்க்கின்றன.


No comments:

Post a Comment