விரிவாக்கம்

கோயமுத்தூர் மாவட்டம் , அன்னூர் வட்டம் ஆகிய வரையறைக்கு உற்ப்பட்ட பகுதியில் அமைந்துள்ள காட்டம்பட்டி எனும் அழகிய கிராமம் பற்றிய ஆக்கப்பூர்வமான செய்திகள் மற்றும் வளர் இளம் நற்பணி சங்கம் எனும் இயக்கம் சார்ந்த நிகழ்வுகளின் வலைதளப் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

வளர் இளம் பூங்கா

வளர் இளம் பூங்கா என்பது காட்டம்பட்டி கிராமத்தில் உள்ள வளர் இளம் நற்பணி சங்கத்தை சேர்ந்த தோழர்களால் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த இடம் இதற்க்கு முன்பு சப்பாத்தி கள்ளி , கருவேல மரம் மற்றும் பல படர்ந்த இடமாகவும், நம்மால் நுழைய முடியாத அளவுக்கு புதர்களுடன் இருந்தது. அந்த இடத்தை நமது நண்பர்கள் உதவியுடன் நாம் முற்றிலும் மாறுபட்ட ஒரு இடமாக மாற்றி
அதில் நூறு மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றோம்.

இந்த பணியானது அக்டோபர் இரண்டு (02-10-2017) காந்தி ஜெயந்தி அன்று தொடங்கப்பட்டது.
நம்முடைய நோக்கம் இந்த இடத்தை ஒரு பூங்காவாக மாற்றியமைக்க வேண்டும் என்பதாகும்.

இந்த நிகழ்வுக்கு பொருள் மற்றும் நிதி உதவி வழங்கிய அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் வளர் இளம் நற்பணி சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.  

புகைப்படங்கள்

No comments:

Post a Comment