விரிவாக்கம்

கோயமுத்தூர் மாவட்டம் , அன்னூர் வட்டம் ஆகிய வரையறைக்கு உற்ப்பட்ட பகுதியில் அமைந்துள்ள காட்டம்பட்டி எனும் அழகிய கிராமம் பற்றிய ஆக்கப்பூர்வமான செய்திகள் மற்றும் வளர் இளம் நற்பணி சங்கம் எனும் இயக்கம் சார்ந்த நிகழ்வுகளின் வலைதளப் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

குச்சி ஊன்றி உயரம் தாண்டுதல் - மாவட்ட அளவில் முதலிடம்

 நமது காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வன் பா.உதயகுமார் மேட்டுப்பாளையத்தில் 2009 - ம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான  குச்சி ஊன்றி உயரம் தாண்டுதல் (pole vault ) போட்டியில் கலந்து கொண்டு முதல் இடம் பிடித்துள்ளார்.

இவர் இது மட்டுமின்றி 2011 - ம் ஆண்டு கோயமுத்தூரில் நடைபெற்ற குச்சி ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.

 2014 - ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய  குச்சி ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடமும் 2015 - ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய  குச்சி ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் மூன்றாமிடமும் பெற்றுள்ளார்.

இவரின் இந்த திறமைகளை வளர் இளம் நற்பணி சங்கம் மற்றும் காட்டம்பட்டி ஊர் பொதுமக்களின் சார்பாக மனமார பாராட்டுகிறோம்.

சான்றிதழ் :


No comments:

Post a Comment