விரிவாக்கம்

கோயமுத்தூர் மாவட்டம் , அன்னூர் வட்டம் ஆகிய வரையறைக்கு உற்ப்பட்ட பகுதியில் அமைந்துள்ள காட்டம்பட்டி எனும் அழகிய கிராமம் பற்றிய ஆக்கப்பூர்வமான செய்திகள் மற்றும் வளர் இளம் நற்பணி சங்கம் எனும் இயக்கம் சார்ந்த நிகழ்வுகளின் வலைதளப் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

மாவட்ட அளவிலான சுண்டாட்டம் போட்டியில் முதலிடம் பெற்ற காட்டம்பட்டி மாணவன்

நமது காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த பா.உதயகுமார் அவர்கள் மேட்டுப்பாளையம் பகுதியில் 2009 - ம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான சுண்டாட்டம் (carrom) போட்டியில் கலந்து கொண்டு தனி நபர் மற்றும் இரட்டையர் பிரிவு இரண்டிலும் மாவட்டத்திலேயே முதல் இடம் பிடித்துள்ளார்.

இவர் இது மட்டுமின்றி 2009 - ம்  வாசவி வித்யாலயா  நடத்திய சுண்டாட்டம் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

2010 - ம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற சுண்டாட்டம் இரடையர் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இது போன்ற சாதனைகளை அங்கீகரிப்பது நமது தலையாய கடமையாகிறது. எனவே நமது செல்வன் உதயகுமார் அவர்களின் சாதனைகளை வளர் இளம் நற்பணி சங்கம் மற்றும் காட்டம்பட்டி ஊர் பொது மக்கள் சார்பாக நாம் வாழ்த்துகிறோம்.


சான்றிதழ்கள் : 



No comments:

Post a Comment